இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக ‘அயோத்தி’ மாறும் என்று Jefferies அமைப்பு மதிப்பிட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், ஓட்டல்கள் மற்றும் இதர வசதிகள் மூலம் அயோத்தியில் ஆண்டுக்கு 5 கோடி சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுவார்கள்.

ஆண்டுக்கு 5 கோடி பக்தர்கள் வருவார்கள் என்றும் இதன் மூலம் ரூ.85,000 கோடி வருவாய் ஈட்ட முடியும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சேவை செய்ய சர்வதேச முனையம் அமைக்கப்படும்.