எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் வழக்கமாக வாங்கும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமாக அரிசியை வாங்க துவங்கி விட்டனர். இதனால் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசி தான் என்ற கட்டுப்பாடுகளை கடை உரிமையாளர்கள் விதித்துள்ளனர். மேலும் இந்த அரிசி விற்பனையை பயன்படுத்தி சில கடைகளில் விலையை அதிகரித்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற அரிசி விற்பனை நடந்து வருவது சில நாட்களிலேயே அரிசி பற்றாக்குறையை எதிரொலிக்கும் என இந்திய உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.