ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள் இந்திய தேசிய கொடியை ஏந்தி இருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலியா செய்தி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீடியோ வைரலானதை தொடர்ந்து பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, ஆஸ்திரேலியாவின் காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த நடவடிக்கையின் காரணமாக நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்யும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்  குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.