தமிழகத்தில் மதுவை ஒழிப்போம் என்று கூறினால் திமுகவுடன் கைகோர்க்க தயாராக உள்ளோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மது மற்றும் வறுமை ஆகியவற்றை ஒழித்தால் அவர்களோடு கைகோர்ப்போம் என்றும் சனாதனத்தை ஒழிக்க நினைத்தால் சேர மாட்டோம் என்றும் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அரிவாள் கலாச்சாரம் தான் மேலோங்கி இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார்.