தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடையும் என்ற விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

சிவகாசியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், உங்களைப் பார்த்து பேசுவது சொந்தக்காரர்களிடம் பேசுவது போல உள்ளது. நாம் அனைவரும் உறவினர்கள் தான். மக்களவையில் உங்களது குரலாக எனது குரல் ஒலிக்கும். மக்களவையில் தேமுதிக உறுப்பினர் இருக்க வேண்டும் என்பதை விஜயகாந்தின் நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ளார்.