திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காதலனுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் தள்ளுபடி செய்துள்ளது. தான் திருமணம் செய்து கொள்வதாகவும், இருவரும் உடலுறவு கொள்வோம் எனக்கூறி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று அந்த இளைஞர் கூறினார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் திருமணம் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதியை மட்டும் மீறியதாகக் கூறியது. ஆனால், இதை பலாத்காரம் என்று கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.