தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் என்னமோ எடப்பாடி பழனிசாமி தான் இந்த உலகத்தின் கடைசி விவசாயி மாதிரியும் தனக்கு மட்டும்தான் விவசாயத்தைப் பற்றி தெரியும் என பேசி வருகிறார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் பழனிசாமி அவர்களே நீங்கள் விவசாயி அல்ல விவசாயிகளை அழிக்க வந்த விஷ வாயு என கூறியுள்ளார். திராவிடம் என்றால் என்ன என தெரியாத பழனிசாமியை கதற விட தான் உதயநிதி அரசியலுக்கு வந்துள்ளார் என்று கூறியுள்ளார். கம்பராமாயணம் எழுதின சேக்கிழார்னு சொல்ற அளவுக்கு General Knowledge வெச்சிகிட்டு இதெல்லாம் நமக்கு தேவையா பழனிசாமி என கூறியுள்ளார்.