சமீப நாட்களாக அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த சீமா. பப்ஜி  காதலனை சந்திக்க பாகிஸ்தானில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக இந்தியாவிற்கு வந்ததால் சீமா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினின் விடுதலை செய்யப்பட்டார். இவ்வாறு பாகிஸ்தானில் இருந்து ஒரு பெண் இந்தியாவிற்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைவது முதல் முறையல்ல.

2015 ஆம் வருடம் சந்தா கான் எனும் பெண் இதேபோன்று இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவர் ஷாருக்கானையும் சல்மான்கானையும் பார்க்கும் ஆசையில் இந்தியாவிற்கு வந்ததாக கூறினார். பின்னர் இரண்டு வருட சிறை தண்டனைக்கு பிறகு அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்போது சீமா தனது பப்ஜி காதலனுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளார்.