உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியை சேர்ந்தவர் வீரேந்திரர்.  இவருக்கு சினேகா, ஷிவானி, கிருஷ்ணா என மூன்று குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மூன்று குழந்தைகளும் வீட்டின் அருகே இருந்த சந்தைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவிந்தன் என்பவர் காரில் வந்து மூன்று குழந்தைகள் மீதும் காரை ஏற்றி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதில் காயமடைந்த குழந்தைகளை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து ஏற்படுத்திய கோவிந்தன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். அவரையும் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தைகளின் தந்தை வீரேந்திரர் மீது உள்ள கோபத்தில் கோவிந்தன் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் மீது கார் ஏற்றும் காணொளி காட்சி சிசிடிவிகளில் பதிவாகி பார்ப்போரை பதற செய்துள்ளது.