ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த சம்பவம், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அனுபவ வீரர் டேவிட் மில்லர் ஒரு ரன் எடுக்க மறுத்து (No-Single), ஸ்டிரைக்கை தன்வசமே வைத்துக்கொண்டது டெல்லி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

மில்லரின் இந்த வினோதமான முடிவைக் கண்டு இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளார். “2 பந்துகளில் 4 அல்லது 6 ரன்கள் தேவைப்பட்டால் மில்லர் எடுத்த முடிவு சரி, ஆனால் 2 ரன்கள் தேவைப்படும்போது ஒரு ரன்னைத் தடுத்து ஸ்கோரை சமன் செய்யாமல் விட்டது ஏன் என்று புரியவில்லை” என அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருவேளை குல்தீப் யாதவ் அந்த ஒரு ரன்னை ஓடி அவுட் ஆகியிருந்தாலும் கூட, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றிருக்கும்; அது டெல்லிக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் என அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.

“>

மில்லரின் இந்தத் தர்க்கமற்ற செயலால் டெல்லி அணி தங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அதே சமயம் தோல்வியின் விளிம்பில் இருந்த குஜராத் அணிக்கு இது ஒரு புதிய வாழ்வாதாரத்தைக் கொடுத்துவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

“நான் குல்தீப் இடத்திலிருந்தால் மில்லரை வலுக்கட்டாயமாக ஓட வைத்திருக்க மாட்டேனா?” என ஆதங்கப்பட்ட அஸ்வின், டெல்லி அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறத் தானே ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.