இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளார். கர்நாடகா, கேரளா, தமிழகம், ராஜஸ்தான், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாக இந்த பாதயாத்திரை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் டெல்லியின் லோனி பகுதி வழியே உத்தரப்பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது யாத்திரை நுழைந்தது.

பின்னர் அவரது யாத்திரை கடந்த புதன் கிழமை மாவிகலா பகுதியில் இருந்து பராத் பகுதிக்கு சென்றுள்ளது. நேற்று அரியானாவின் குருசேத்ராவை இந்த யாத்திரை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் வெளியீட்டுள்ள செய்திகள் கூறப்பட்டுள்ளதாவது, பாரத் ஜோதா யாத்திரையில் அனைவரும் பெண்ணாக இன்று பங்கேற்க உள்ளனர். இது அதிக ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்றாக இருக்கும். மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் முன்னோக்கிய பயணத்தில் ராகுல் காந்தி தீவிர உணர்வோடும், உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளது. அதன்படி இந்த பாத யாத்திரையில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.