பொதுவாகவே குறும்புத்தனம் விலங்குகளில் குரங்குக்கு முதலிடம் தான். குறும்பு செய்பவர்களை குரங்கு சேட்டை என்று சொல்வதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். குரங்கு எப்போது என்ன செய்யும் என்று யாராலும் யூகிக்க முடியாது. சில சமயங்களில் யாரையாவது அடித்து விடும் என்றாலும், குரங்கு கடியும் குரங்கு பிடியும் எப்போதும் பிரசித்தமானது. கையில் இருக்கும் பொருட்களை பறித்துக் கொண்டு பறந்து விடுவதிலும் குரங்குகளை மிஞ்ச முடியாது. இதனிடையே குரங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பகிரப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்கி குரங்கு கூட்டத்தை நோக்கி செல்கிறார். கையில் பிஸ்கட்டை அந்த பெண் வைத்திருக்கும் நிலையில் பாக்கெட்டை திறந்து குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுக்கிறார். பல குரங்குகள் அழகிய அந்த பெண்ணை பார்க்கவே இல்லை. சில குரங்குகள் பிஸ்கட்டை வாங்கிக்கொண்டு அதனை முகர்ந்து பார்த்துவிட்டு தூக்கி வீசுகின்றன. குரங்குகள் தொடர்ந்து பிஸ்கட்டுகளை வீசியதால் அதிர்ச்சி அடைந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Saloni Satpute இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@saloni_satpute_official)