தமிழகத்தில் கடந்த சில நாள்களாக மது-கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்று நடக்கும் சம்பவங்களை தடுக்க, டாஸ்மாக் கடைகளை குறைப்பது மட்டுமல்லாமல், நேரத்தையும் குறைப்பது தான் “ஒரே தீர்வு” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.