ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் பால்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், வியாபாரம் நோக்கத்துடன் அல்லாமல் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் விதமாக சேவை நோக்கத்துடன் சிறந்த இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆவினில் குளிர்பானங்களை கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் 27 லட்சத்து 189 பணியாளர்களுக்கு 2.70 கோடி பொங்கல் போனஸ் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.