தமிழகத்தில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என் நிலையில் சில கல்வி நிறுவனங்களில் நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்துள்ளதாகவும் மற்ற இரண்டு நாட்களும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த கல்வி நிறுவனமும் பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் விடுமுறைகளை முழுமையாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது