ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் நிரம்பிய பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்படுபவை உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகை புகாரில் தெரிவிக்கப்பட்டது போல அத்துமீறி ஆளுநர் மாளிகைக்குள் யாரும் நுழைய முற்படவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்று கூறப்படுவதும் உண்மையல்ல. மேதகு ஆளுநர் அவர்களுக்கும், அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.