ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அதனால் நான் சாக போகிறேன். இது என்னோட முடிவு தான். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று கூறியிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.