இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது ஆன்லைனில் ரிவ்யூ கொடுத்தால் சம்பாதிக்கலாம் எனக் கூறி பெண் ஒருவரிடம் இருந்து 13 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ரிவ்யூவிற்கு 150 ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி வேலையில் சேர்ந்து உள்ளார். சம்பாதித்த பணத்தை எடுக்க அவரிடம் கூடுதல் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளது அந்த கும்பல். இது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.