
தமிழக அரசின் கட்டணமில்லா ஆன்மீக பயணத்தில் 60 முதல் 70 வயதுடைய மூத்த குடிமக்கள் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆன்மீகப் பயணத்தில் ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்படுவர். விருப்பமுள்ளவர்கள் அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோவில் அலுவலகங்கள் மற்றும் hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதனை உரிய சான்றுடன் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடி மாத ஆன்மீக பயணம் 4 கட்டங்களாக வரும் 19ஆம் தேதி, 26ஆம் தேதி, ஆகஸ்ட் 2ஆம் தேதி, ஆகஸ்ட் 9ஆம் தேதிகளில் தொடங்குகிறது. ஆன்மீக பயணமாக 1,000 பேரை அழைத்துச் செல்ல மதுரை இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டுள்ளது.