மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த லலிதா சால்வே மாநில காவல் துறையில் பெண் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தனது உடலில் மாற்றம் ஏற்பட்டு ஆணுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி பெற்று அறுவை சிகிச்சை மூலமாக ஆணாக மாறிய இவர் லலித் குமார் சால்வே என்ற பெயரில் ஆண் காவலராக பணியை தொடர்ந்தார்.

இதனை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு சீமா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 15ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பெண்ணாக இருந்து ஆணாக மாறி குழந்தைக்கு தந்தையாகியுள்ள இவர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.