புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் குளத்தின் கரையில் பதுங்கி இருந்த ஒரு மலைப்பாம்பு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை பாதி விழுங்கியது. பின்னர் அசைய முடியாமல் மலைப்பாம்பு கிடந்தது. இதனை பார்த்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் இருந்த ஆட்டுக்குட்டியை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதனையடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாம்பு நார்த்தாமலை காப்பு காட்டில் விடப்பட்டது.