இன்றைய காலகட்டத்தில் படித்த இளைஞர்களின் சில வேலைகள் பலரையும் வியக்க வைக்கும் வகையில் உள்ளது. அதன்படி கேரளாவை சேர்ந்த விவசாயி சுஜித் எஸ்பி என்பவர் புதிய உச்சத்தை எட்டியுள்ளார். இவர் தன்னுடைய தனித்துவமான விவசாய முறைகளால் ஏராளமான மக்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் instagram கணக்கில் அவர் ஆடி கார் ஓட்டி வரும் வீடியோ வெளியானது.

இதற்கு முன்பு கீரையை அறுவடை செய்யும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்ட நிலையில் தற்போது அவர் பரித்த கீரைகளை சாலையோர சந்தையில் விற்பதற்காக தன்னுடைய ஆடி காரில் வந்துள்ளார். கீரைகளை ஏற்றுக் கொண்டு ஆடி காரில் சந்தைக்கு வந்த அவர் சாலையில் பாயை வைத்து வாடிக்கையாளர்களுக்கு கீரை விற்று உள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் கேரளா விவசாயியின் வெற்றியை பாராட்டி வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

variety farmer (sujith) இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@variety_farmer)