இந்தியாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த நாய்களால் ரேபிஸ் போன்ற ஆபத்தான நோய்கள் பரவும் அபாயம் எப்போதும் இருக்கிறது. இந்தத் தெரு நாய்கள் எப்போது வேண்டுமானாலும் மக்களைத் தாக்கலாம் என்பதால், தில்லி மற்றும் என்சிஆர் (Delhi-NCR) பகுதிகளில் நாய்களைப் பாதுகாப்பகங்களில் வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில், நாய்களுக்குத் தடுப்பூசி போடும் ஒரு புதிய வழிமுறை தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், தடுப்பூசி போடும் ஊழியர்கள், ஒரு பெரிய குழாயை  ஊதி, அதன் முனையில் உள்ள ஊசியின் மூலம், தெருவில் சுற்றும் நாய்களின் உடலில் மருந்தைச் செலுத்துவதைக் காணலாம்.

​தடுப்பூசி போடும் பணியாளர்கள் நாய்களுக்கு அருகில் சென்று அவற்றைப் பிடித்து ஊசி போடும்போது, நாய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. இதைத் தவிர்ப்பதற்காகவே இந்தத் தனித்துவமான முறை பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காணொளியில் காட்டப்பட்டுள்ள தடுப்பூசி தொழில்நுட்பம் எகிப்து நாட்டில் பயன்படுத்தப்படுவதாகவும், இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த 17 வினாடி காணொளியை @gunsnrosesgirl3 என்ற பயனர் டிவிட்டரில் (X) பகிர்ந்திருந்தார். இந்தக் காணொளியை இதுவரை 4.8 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். இந்தத் தடுப்பூசி போடும் முறையை சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஒரு புத்திசாலித்தனமான யோசனை என்று பாராட்டி, “இந்த முறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.