தமிழகத்தில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதிதாக 2000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் காலி பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யவும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளித்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.