தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம் மற்றும் குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த சில பேர் நீலிமா ராணியை அவதூறான வார்த்தைகள் உடன் இழிவாக பேசி பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த நீலிமா வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றில் “தன்னை சுற்றி எதிர் மறையான நபர்கள் பலர் இருக்கின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்லவேண்டும் என்பதையும் நான் அறிவேன். அவர்களை பிளாக் செய்துவிட்டேன். அந்நபர்களின் ஆத்மா அமைதி பெற பிரார்த்திக்கிறேன்” என பகிர்ந்துள்ளார். சரியான பதிலடி கொடுத்தீர்கள் என அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.