தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியை இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் அமீர் முதலில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைத்துறையில் நுழைந்தார் . அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இவர் 2007 ஆம் ஆண்டு இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது. தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் கோபத்தில் அவசரப்பட்டு நடிக்க வந்துட்டேன் என இயக்குனர் அமீர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் பேசும்போது, எனக்கு படங்களை இயக்க தான் பிடிக்கும். கோபத்தில் எடுத்த முடிவால் இப்போது படங்களை இயக்க முடியவில்லை. இதனால் தற்போது தவித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.