புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோயிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழாவானது சென்ற 22-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா நேற்று நடந்தது. புஷ்கரணியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா கலந்துகொண்டு தரிசனம் மேற்கொண்டார்.

அதன்பின் ரோஜா பேசியதாவது, பெரிய நடிகர்களில் பேசிபேசியே ஜீரோ ஆனவர் தான் நடிகர் ரஜினி. இதனை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். என்டி ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என ரஜினிகாந்த் கூறியது தவறு. ஜெகன் மோகன் ரெட்டி போல் ஒரு முதல் மந்திரியை எங்குமே பார்க்க இயலாது.

ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதியு தவிகளை செய்து உள்ளார். மாணவர்கள் இடை நிற்றல் கூடாது என்பதற்காக கல்வியுதவி தொகைகளை அதிகளவில் வழங்கி இருக்கிறார். இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன் கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது என்று அவர் கூறினார்.