அமெரிக்க நிறுவனம் ஒன்று ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் 2023 -ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சி.இ.ஓ வுடன் ஆலோசனை கூட்டம் எனக் கூறி காலையில் 7:30 மணிக்கு அலுவலகத்தின் கான்ஃபரன்ஸ் அறைக்கு வரவழைத்து 3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. “என்னை மன்னித்து விடுங்கள். வேறு வழி இல்லை. உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் எனக் கூறி மேலாளர்கள் வருத்தத்துடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்துள்ளார்”.

இந்த சம்பவம் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிக வட்டி விகிதங்கள், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையேயான பதட்டங்கள், ரஷ்யா- உக்ரைன் போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் உலகளாவிய சில தனியார் வங்கிகள் சமீபத்திய மாதங்களில் தங்கள் பணியாளர்களை குறைத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.