தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.