சுந்தர்.சி இயக்கத்தில் சென்ற 2021 ஆம் வருடம் வெளியாகிய படம் “அரண்மனை 3”. இந்த திரைப்படத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பு தயாரித்திருந்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமானது வெளியிட்டது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது சுந்தர்.சி அரண்மனை-4 திரைப்படத்தை டைரக்டு செய்ய தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்குரிய பணிகளில் சுந்தர்.சி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் நேற்று சுந்தர் சி, சந்தானம் இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து தங்களது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வரும் நிலையில், இதன் வாயிலாக அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதியுடன், சந்தானமும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.