பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வெளியிட்டுள்ள பதிவில், சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகள் நிறைந்திருந்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

 

மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் தமிழகத்தில் பள்ளிக்கூட வளாகம் தொடங்கி மருத்துவமனை வரை போதை பரவலாக்கல் தொடர்வது குறித்து தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன் அவர்களும் பதிலளிப்பார்களா? என்று பதிவிட்டுள்ளார்.