தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை யாராவது விபத்தில் த்தில் உயிரிழந்தால் அல்லது நிரந்த முடக்கமடைந்தால் மாணவர்களுக்கு அரசு சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த தொகை மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். இந்த உதவி தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டி தொகையும் மாணவர்களின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.