பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி அரசு பங்களாவை காலி செய்து சாவியை  ஒப்படைத்தார். மேலும்   உண்மையை பேசுவதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்  கூறியுள்ளார்.