தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுவ வயதை 62 ஆக உயர்த்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகின்றது. இந்த தகவல் வெறும் வதந்தி என்று தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. தற்போது 60 வயதாக உள்ள ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அப்படி எந்த ஆலோசனையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஓய்வு வயது குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாக கூடிய தகவல் முற்றிலும் வதந்தி என்றும் இது போன்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த தகவல் உண்மை இல்லை என்பதால் அரசு ஊழியர்கள் இதனை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளது.