நாட்டில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் வருமான வரி துறையை ஏவி விட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஐடி தாக்குதலுக்கு பின்னால் அரசியல் காழ்ப்புணர்ச்சி நிச்சயம் உள்ளது என்று தெரிவித்துள்ள அவர் கர்நாடகாவில் மட்டுமல்ல எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் ஐடி தாக்குதல்கள் நடப்பது சகஜம் ஆகிவிட்டது என்று கூறினார். கர்நாடகாவில் இருந்து சட்டசபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களுக்கு பண பட்டுவாடா செய்ய நிதி பாய்கிறது என்ற கருத்துக்கு பாஜக தலைவர் அஸ்வநாத நாராயணா மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.