திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். எத்தகைய சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடும் ஆற்றல் உடன்பிறப்புகளுக்கு உண்டு.

உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைபட்டு உமி வேறாய், அரிசி வேறாய் பிரிவது போல் என சங்கத் தமிழ் நூலில் கலைஞர் எழுதியிருப்பார். நம் கழகத்தினர் களத்தில் கவனம் செலுத்திப் பணியாற்றும்போது, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.