தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக எம்பியுமான சதானந்த கவுடா அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 70 வயதாகும் இவர் 2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக இருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது இவர் தேர்தல் அரசியலில் இருந்து தான் முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.