சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதா என்று அமைச்சர் உதயநிதி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி தரப்பு, தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.