தமிழகத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் மின் கம்பம் அல்லது ஒயர்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மழைக்கால நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க செல்ல வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.