மதுரையைச் சேர்ந்த முன்னாள் ரவுடி வரிச்சூர் செல்வம். இவர் தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வரிச்சூர் செல்வம் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய மொத்த சொத்து மதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய சொத்துக்கள் மொத்தமும் தன் அப்பா சம்பாதித்தவை என்றும் இயற்கையாகவே நான் வசதி படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவன் என்றும் கூறியுள்ளார். வரிச்சூர் செல்வம் தன் உடம்பில் 200 பவுன் வரை தங்க நகைகளை அணிந்துள்ள நிலையில் அவற்றிற்காக மட்டும் 45 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தியுள்ளார். அதன் பிறகு இவரிடம் ரேண்ட் ஓவர், பார்ச்சூனர், எம்.ஜி கிளாசன் சரியான 7 கார்கள் இருக்கிறது.

இங்கு எனக்கு 3 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருக்கும் நிலையில், வரிச்சூரிலும் பல கோடி மதிப்பில் சொத்துக்கள் இருக்கிறது. அவற்றின் மொத்த மதிப்புகள் எனக்கு சரியாக தெரியாது. விளாங்கூரில் எனக்கு ஒரு இடம் இருக்கிறது. அவற்றின் இன்றைய மதிப்பு மட்டும் சுமார் 10 கோடிக்கும் மேல் இருக்கும். என்னுடைய மகன் மற்றும் மருமகன் எல்லோரும் தொழில் செய்கிறார்கள். அவர்கள் எனக்கு மாதந்தோறும் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை தருவார்கள். அவசிய எல்லாம் நான் செலவு செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதோடு தன் மீது இருந்த வழக்குகளுக்காக மட்டுமே 7 கோடி ரூபாய் வரை வழக்கறிஞர் செலவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் பிறரிடம் இருந்து வாங்கும் பழக்கம் கிடையாது எனவும் மற்றவர்களுக்கு வாரி வழங்குவதில் வள்ளல் என்றும் கூறியுள்ளார்.