நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில் விதவிதமான விநாயகர் சிலைகளை கொண்டு மக்கள் அனைவரும் பல இடங்களிலும் வழிபாடு செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பணக்கார விநாயகர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 29ஆம் தேதி வரை 10 நாட்கள் கோலாலமாக கொண்டாடப்பட உள்ளது.

அதற்காக மும்பையில் 69 கிலோ தங்க ஆபரணங்கள் மற்றும் 295 கிலோ வெள்ளி பொருட்கள் உடன் கூடிய பணக்கார விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.