தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அதன்பின் அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் நிலையை பொறுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.