அமெரிக்காவில் உள்ள ஜெர்சி நகரத்தில் வசித்து வந்தவர் இந்திய மாணவி மயூசி பகத். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோரும் காவல்துறைக்கு புகார் அளித்தனர்.

நான்கு வருடங்களாக மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் உளவு அமைப்பின் நெவார்க் அலுவலகம் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இதன் மூலம் மாணவியை பற்றி தகவல் தருபவர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.