கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படம் கன்னடத்தில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி உலகம் முழுவதும் மொத்தமாக 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை ரிஷப்ஷெட்டி இயக்கி நடிக்க, கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹோம்பேல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்களும் சில மத்திய மந்திரிகளும் பாராட்டினர். இந்நிலையில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் என்ற 2 பிரிவுகளில் காந்தாரா திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இந்த தகவலை ஹோம்பேல நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்களும் காந்தாரா பட குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.