பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு செல்லாது என்றும், அதிமுகவுடன் அவர் கூட்டணி அமைத்தது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி கட்சியில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் தனக்கே உள்ளதாகக் கூறும் ராமதாஸ், அன்புமணி தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பாமகவின் பெயரைப் பயன்படுத்தி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு எவ்வித உரிமையும் இல்லை; கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
மகன் அன்புமணி அமைத்த கூட்டணிக்கு எதிராகத் தந்தை ராமதாஸே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது, அதிமுக மற்றும் அன்புமணி தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
