இந்தியாவில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக கிராமப்புறங்களில் இணைய இணைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பணிகள் அனைத்தும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும். அதன் பிறகு புதிய கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களை நடத்துவதற்கு தொடக்கப்பள்ளி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கான பாடங்கள் மணற்கேணி என்ற செயலியில் உள்ளதாகவும் அதனை பதிவிறக்கி பாடங்களை நடத்த வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.