கர்நாடகாவில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். பின்னர் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் பேசிய அவர், ஆக.15 சுதந்திர தினம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு 2,000 வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என   அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஜூன் 15ம் தேதி ஜூலை 15 வரை 2,000 ஊக்கத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் ஊக்கத்தொகை பெற வறுமைக்கோட்டுக்கு கீழ், வறுமைக்கோட்டுக்கு மேல் என்ற வேறுபாடுகள் கிடையாது எனவும் கூறியுள்ளார்.