நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி என்னும் படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் நடிப்பை விட பேஷனில் அதிக ஆர்வமும், ஈர்ப்பும் கொண்டிருந்தார். இந்த நிலையில்  இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என பரவிய தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அனிருத்தும், கீர்த்தி சுரேஷூம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து கீர்த்தி சுரேஷ், திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது, அனிருத் தனக்கு நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து திருமணம் குறித்து ”திருமணம் நடக்கும்” என்றும் பதிலளித்து உள்ளார்