டெல்லியில் தோழியின் மகன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவில் வீடு திரும்பி கொண்டிருந்த சாக்ஷி என்ற 16 வயது சிறுமியை ஷாபாத் டெய்ரி பகுதியில் சாஹில் என்ற 20 வயது நபர் 16 முறை கத்தியால் குத்தியும், பெரிய கல்லை கொண்டு தாக்கியும் கொடூர கொலை செய்துள்ளார்.

அச்சிறுமி தற்காப்புக்காக பொம்மை துப்பாக்கியை எடுத்து சாஹிலை நோக்கி காட்டினார் எனவும் இதில் கோபமடைந்த சாஹில் சிறுமியை கொலை செய்துள்ளார் எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இருப்பினும் டெல்லியில் விசாரணை மேற்கொண்ட பிறகே உறுதியான விபரங்கள் தெரியவரும். இதுகுறித்து எம்.பி. ஹன்ஸ்ராஜ் கூறியதாவது, இந்த பயங்கர சம்பவம் பற்றி கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டார். அவரது பெண் குழந்தைகளை காப்போம் எனும் திட்டத்தின் கீழ் இந்தியாவின் மகள்களின் நல்வாழ்வுக்காக எப்போதும் முன்னோக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறார்” என ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார்.