வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பாக கடந்த 3ம் தேதி பேரணி நடந்தது. இதன் காரணமாக மேதேயி சமுதாயத்தினர் மற்றும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது.

அதன்பின் ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்துக்கு இதுவரையிலும் 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் மணிப்பூரில் கலவரத்தின் போது இறந்தவர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய மற்றும் அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்..